அமரர் சுப. அருணாசலம் நினைவு சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி

அனுப்ப வேண்டிய இறுதி நாள் 30.09.2022

Suba photo

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை வரும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி சிறப்பாக நடத்தவிருக்கிறது. அதனை ஒட்டி  சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக முன்னாள் தலைவர் அமரர் சுப. அருணாசலம் நினைவாக அவரது குடும்பத்தினரின் நிதியாதரவுடன் “சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் போட்டிக்கான விதிகள் பின்வருமாறு:

பாடல் எழுதுவதற்கான சூழல் இதுதான்: நமது சுற்றுச் சூழலுக்குத் தற்போது பல்வேறு வகைகளில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திப் பாடல் வரிகளை எழுத வேண்டும்.

பாடல் சிங்கப்பூர்ச் சூழலில் ஒருவர் பாடுவதாக அமைந்திருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக மூன்று பாடல்கள் வரை அனுப்பலாம். ஒரு பல்லவி மற்றும் நான்கு சரணங்கள் இருக்க வேண்டும் ஒவ்வொன்றும் நான்கு வரிகளில் மொத்தம் 20 வரிகள் மட்டுமே இருக்க வேண்டும்.

சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம். எழுத்தாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்கள் 11 பேரும் போட்டியில் பங்கேற்க முடியாது. மற்ற எழுத்தாளர் கழக உறுப்பினர்கள் பங்கேற்கலாம்.

போட்டி குறித்த நடுவர்களின் முடிவே இறுதியானது.

http://singaporetamilwriters.com/suba எனும் இணைப்பு (link) மூலம் கூகுள் படிவத்திற்குச் சென்று அதனை நிரப்பி பாடல்களுடன் அனுப்ப வேண்டிய இறுதி நாள் 30.09.2022.

மேல் விவரங்களுக்கு திரு. நா. ஆண்டியப்பன் 97849105; திரு. சு. முத்துமாணிக்கம் – 96753215; திருவாட்டி கிருத்திகா [email protected], திரு. கோ. இளங்கோவன் – 91216494; திருவாட்டி மலையரசி – 97826039 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். நடுவர்களால் தெரிவு செய்யப்படும் மூன்று பாடல்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் : முதல் பரிசு $300.00;  இரண்டாம் பரிசு  $250.00; மூன்றாம் பரிசு $150.00.

முதல் பரிசு பெறும் பாடல் இசையமைக்கப்பட்டு கண்ணதாசன் விழாவில் ஒலிபரப்பப்படும்.

திரு. சுப. அருணாசலம் 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர். அவரது கணீர்க் குரலைக் கேட்டவர்கள் எளிதில் அதை மறந்திருக்க முடியாது. அவரது நினைவாகக் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் போட்டி ஆண்டுதோறும் கண்ணதாசன் விழாவை ஒட்டி நடத்தப்படும்.

உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள்! திரு சுப அருணாசலம் அவர்களின் தமிழ்த் தொண்டைச் சிறப்பிக்கும் வகையில் அதிகமானோர் கலந்துகொண்டு, நிகழ்வினை வெற்றிபெறச் செய்யுமாறு உங்களைச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.